
இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்திரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுய சிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருதப்படுவதால் இவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் கூட நீதி மன்றத்தில் ஏற்கப்படுவதில்லை. ஆனால் பாலியல் குற்றங் களை இவர்கள் பாவமாக நினைப்பதேயில்லை.